Vallalar Universal Mission Trust   ramnad......
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்


கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்


எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
 
ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்

அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்

மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்

வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே

நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு

நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்

ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.