பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
Write a comment