Vallalar Universal Mission Trust   ramnad......
உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர் உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
 நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
8 Comments
Badhey Venkatesh
உங்களுக்கு பதிவு போட மட்டும் அறிவீர் - தவம் த்யானம் அறியீர்
Friday, November 25, 2022 at 03:53 am by Badhey Venkatesh
rajaveer jothimurugan
தாங்கள் அறிவீரா அறிந்தால் விளக்கவும்.... தாங்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவரா.... means சைவ உணவு உட்கொள்பவரா... நாங்கள் தவம் தியானம் அறியாதவர்என்று உங்களுக்கு தெரியுமா..நீங்கள் எத்தனை வருடமாக தவம் தியானம் அறிவீர்கள் ...விளக்கவும்...
Saturday, November 26, 2022 at 03:47 am by rajaveer jothimurugan
Badhey Venkatesh
அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “

பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி


இந்த அருட்பாவுக்கு விளக்கம் கண்டுபிடித்தால் தான் மேலே கூறிய பாட்டுக்கு விளக்கம் கிட்டும் - இது சைவ சித்தாந்தம் படித்தால் தான் உயிர் / உடல் வரும் வகை அறிய முடியும் - சன்மார்க்கம் தான் 6 ஆம் திருமுறை தவிர வேறேதும் படிப்பதிலையே - ஏன் வள்ளல் பெருமான் கூறிய திருமந்திரம் திருவாசகம் படிப்பதிலை ??
Friday, December 2, 2022 at 13:02 pm by Badhey Venkatesh
Badhey Venkatesh
ஆமாம் சாமி நீர் ஏன் தலையில் முண்டாசு கட்டுவதிலை ?? எல்லவரும் கட்டுவர் - விந்து மேலேற்றவிலை எனினும் - வழி தெரியாவிடினும் சட்ங்காக அணிவர் நீர் கட்டவிலையே ?? எல்லாம் சடங்கு தான்
Friday, December 2, 2022 at 13:04 pm by Badhey Venkatesh
Badhey Venkatesh
உரை நடை நன்கு ஊன்றி படிக்கவும் ஜீவகாருண்ணியம் எது வரைக்கும் அனுபவம் கொடுக்கும் என படி நிலைகள் அருளியுள்ளார் -
ஜீவகாருண்ணியம் - சத்திய ஞானம் என் படி நிலைகள் உள
Friday, December 2, 2022 at 13:06 pm by Badhey Venkatesh
rajaveer jothimurugan
எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க ,,, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.....சோறுதான் சன்மார்க்கம் ...
Friday, December 2, 2022 at 15:24 pm by rajaveer jothimurugan
Badhey Venkatesh
என்ன தான் ஆனாலும் , செக்யூரிட்டி ராணுவ வீரர் ஆக முடியாது .
Saturday, December 3, 2022 at 14:41 pm by Badhey Venkatesh
rajaveer jothimurugan
எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க ,,, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.....சோறுதான் சன்மார்க்கம் .உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
Sunday, December 4, 2022 at 00:59 am by rajaveer jothimurugan