Vallalar Universal Mission Trust   ramnad......
ஞானத்தில் கண்டேன்..
என்செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி
என்னை வாழ்விக்கின்ற பதியைப்
பொன் செயல் வகையை உணர்த்தி  என் உளத்தே
பொருந்திய மருந்தை என் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்த சன்மார்க்க சற்குருவைக் 
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டு கொண்டேனே.
     நான் செய்கின்ற செயல்கல் எல்லாவற்றையும் தன்செயலாக ஏற்று என்னைத் தன் அருள் வாழ்வில் வாழச் செய்கின்ற தலைவன்.   சிவபோகம் பெறுவதற்குரிய  வழிவகைகளை எனக்கு உணர்த்தி என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள  தெய்வமருந்து போன்றவன் எனக்குப்பொருளாக விளங்குபவன் என்னிடம் வன்மைச்செயல்கள் இல்லாதபடி அகற்றி உலகெலாம் நற்செயல்களே விளங்கவைத்த சன்மார்க்க ஞான குருவாக உள்ளவன்.   பயன் அற்ற செயல்கள் ஒழிந்த சத்திய ஞானக் கோயிலில் விளங்குபவன்.  அத்தகைய ஆண்டவனைக் கண்டு கொண்டேன் வாழ்வேன்.