மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
உலவா ஒருபே ரருளா ரமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம்
தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக்
குடிகொண் டவனே அபயம் அபயம்.
Write a comment