Vallalar Universal Mission Trust   ramnad......
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
கருணைஅமு தேஎனக்குக்
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
காட்சியே கனகமலையே
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
தலைவனே நின்பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
சார்கின்ற தோறும்அந்தோ
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
மதிஎலாந் தித்திக்கும்என்
மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
வரும்இன்பம் என்புகலுவேன்
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
தோன்றிட விளங்குசுடரே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
சோதிநட ராஜகுருவே.