எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து இன் சொல்லினால் இனிக்கச் செய்து, தான்கெட்டிருப்பதே மேலான புண்ணியம்.
Write a comment