தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
Write a comment