Vallalar Universal Mission Trust   ramnad......
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
எனக்கும் உனக்கும்

அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.